ஒரு முயற்சி
சில தினங்களுக்கு முன் நானும் கவிதை எழுதறேன்னு வீரவசனம் பேசிட்டு போய், குப்புற படுத்து யோசிச்சாலும் ஒன்னும் எழுதத் தோணல. ஆனா இன்னைக்கு காலைல நான் பார்த்த ஒரு காட்சி என்னை கொஞ்சம் பாதிச்சிடுச்சு. அதைக் கொஞ்சம் கவிதை எழுதறவங்க பாணில, பிரிச்சு எழுதிப்பார்த்தேன். இப்படித்தான் வந்துச்சு. படிச்சுட்டு கருத்தைச் சொல்லுங்க....
இதை கவிதைன்னு சொல்லலாமா???
காலையில்
அலுவலகம் வரும் வழியில்
குழந்தைக்குச் சோறூட்டிக் கொண்டிருந்தார்
பக்கத்து வீட்டு ஆண்ட்டி
அந்நேரம்
பிச்சை கேக்க வந்த
குழந்தையை காண்பித்து
தன் மகனிடம்
"ஒழுங்கா சாப்பாட்ட திங்கலைனா
இவளுக்கு உன் சோத்த குடுத்துடுவேன்"
என மிரட்டுகிறார்.
இதை கவிதைன்னு சொல்லலாமா???
காலையில்
அலுவலகம் வரும் வழியில்
குழந்தைக்குச் சோறூட்டிக் கொண்டிருந்தார்
பக்கத்து வீட்டு ஆண்ட்டி
அந்நேரம்
பிச்சை கேக்க வந்த
குழந்தையை காண்பித்து
தன் மகனிடம்
"ஒழுங்கா சாப்பாட்ட திங்கலைனா
இவளுக்கு உன் சோத்த குடுத்துடுவேன்"
என மிரட்டுகிறார்.
Comments
கவிதை தான்
கவிதை தான்
நன்றி நர்சிம்...
உங்களைப் போல பெரியவங்க கொஞ்சம் டிப்ஸ் கொடுத்தா கவிதை எழுத கத்துக்குவேன்... :)