இந்திய கிரிக்கெட் - ஐபிஎல்'க்கு முன் ஐபிஎல்'க்கு பின்

ஐபிஎல் வந்தவுடன் இந்திய கிரிக்கெட்டே மாறிவிட்டது எனலாம். அதுவும் சமீபத்தில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணிலேயே மண்ணைக் கவ்வுவதற்கு ஐபிஎல்'லும் ஒரு காரணம்தான். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு முறையை, ஐபிஎல்'க்கு முன் மற்றும் ஐபிஎல்'க்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம்.

முதலில் எல்லாம் இந்திய அணியில் இடம்பெற தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்கும் அளவுக்குப் போராடவேண்டும். முதலில் ரஞ்சிக் கோப்பையில் குறைந்தபட்சம் ஒரு நான்கு சதங்களாவது விளாச வேண்டும். அப்புறம் இளம் வீரர்கள் U-19, U-21 உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் நன்றாக சோபிக்க வேண்டும். இதெல்லாம் நடந்தால் உங்களுக்கு கிரிக்கெட் அணியின் பதினைந்து நபர் பட்டியலில் பெயர் வரலாம். அதற்கு நடுவிலும் பல அரசியல்கள் இருக்கும். ஏற்கனவே அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்களோ இல்லையோ, அவர்கள் பெயரை அப்படியே நீக்காமல் வைத்திருப்பார்கள். நீங்கள் அணிக்கு வர எவ்வளவு சிறப்பாக விளையாடிணீர்களோ, அதே அளவு படுமோசமாக விளையாடினால் தான் பழைய வீரர்களின் பெயர்கள் நிராகரிக்கப்படும் வாய்ப்புகளும்.

ஆனால் ஐபிஎல் வந்தவுடன் எல்லாமே மாறிவிட்டது. டீம் ஓனர்கள், இளம் வயது வீரர்களை எளிமையாகப் பெற முடிந்தது. இளம் வயது வீரர்களுக்கு காசும் கம்மி. அதேபோல வீரர்களும் ஐபிஎல்'லை விரும்பிகிறார்கள். அவர்களுக்கு ஐபிஎல்'லில் காசு சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம், மக்களால்/கிரிக்கெட் சங்கத்தால் கவனிக்கப்படும் வாய்ப்புகளும் அதிகம்.

இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் ஒவ்வொருவரும் பிரிந்து தங்கள் லோக்கல் ஐபிஎல் அணிக்காக விளையாடும் போது, அங்குள்ள இளம் வீர்களின் ஆட்டத்தையும், ஸ்பெஷாலிட்டியையும் நன்கு கவனிக்க முடிகிறது. அவர்களுக்குள்ளான நட்பும் பலம் பெறுகிறது. இதனால் இப்போது எந்த ஒரு சீனியர் பிளேயரும், கிரிக்கெட் அணி அறிவிப்பு வரும் போது நிம்மதியாக இருக்க முடியாது. தங்கள் பெயர் இருக்குமோ இல்லையோ என வயித்தில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் இருக்கவேண்டிய நிலை.

சமீபத்திய இந்திய-இங்கிலாந்து தொடராகட்டும், இந்திய-பாக்கிஸ்தான் தொடராகட்டும், ஏன் தற்போது நடைபெறும் இந்திய-ஆஸ்திரேலியா தொடராகட்டும், சென்னை ரசிகர்கள் அனைவரும் இது சிஎஸ்கே மேட்ச் என்று கூறும் அளவுக்கு, சிஎஸ்கே அணி வீரர்கள் மட்டும் நன்றாக விளையாடுவதைக் காண முடிகிறது. இதற்கு தோனியும் ஒரு முக்கிய காரணம். சிஎஸ்கே வீரர்களை அவரால் எளிதில் பயன்படுத்த முடிகிறது. சிஎஸ்கே வீரர்களுக்கு இந்திய அணியும் ஒரு கம்போர்ட் ஜோன் (Comfort Zone) ஆகவே இருக்கிறது.

அதுவும் தோனி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு வந்தவுடன் தமிழக வீரர்கள் இந்திய அணியில் எளிதாக நுழைய முடிகிறது. முன்பெல்லாம் ஒரு தமிழக வீரர் இருந்தாலே, அதெல்லாம் பெரிய விஷயம். சரி இது நல்ல விஷயம் தானே என்கிறீர்களா?

நல்ல விஷயம் தான், ஆனால் ஐபிஎல் வந்தவுடன் வீரர்களின் ஆட்டப்போக்கே மாறிவிட்டது. நல்ல பேட்ஸ்மேன்கள் கூட ஸ்லாகற்களாக (Slogger) மாறிவிட்டார்கள். உதாரணத்திற்கு நம்ம முரளி விஜய்'யை எடுத்துக்கொள்ளுங்கள். டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாடி வந்த அவர், ஐபிஎல்'லில் விளையாட ஆரம்பித்ததும், இந்திய டெஸ்ட் அணியில் நன்றாக விளையாட முடியவில்லை. ரஞ்சிக் கோப்பை போட்டிகளிலும் தன் திறமையைக் காட்டக் கஷ்டப்படுகிறார்.

இதுதான் பிரச்சனை. ஐபிஎல் வந்தவுடன் ரஞ்சிக் கோப்பையை யாரும் சீந்துவதே இல்லை. இதோ இந்த ரஞ்சி போட்டிகளில் வெளுத்துக் கட்டிய வாசிம் ஜாப்பருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை.

புதிதாக ஒன்று வந்தபிறகு, பழைய விஷயங்களை இழப்பது ஒன்றும் புதிதல்ல. ஐபிஎல் உபயத்தால் நாம் நமது கிரிக்கெட் தரத்தை இழந்துவிட்டோம் என்பதே உண்மை.

Comments

Very good post and very true too.. Now Cricket in India is no more a game, it is a business !

Every time a gambling racket bursts, atleast one die-hard cricket lover loses faith in the players..

For me, IPL is just another entertainment meant for filthy rich people who are in desperate need to convert their black money into white :-)
Thanks for the comments Yamuna... Cricket becomes business now-a-days :(

Popular Posts